“18 வயது நிறைவடையாத மனைவியுடன் உறவு கொள்வதும் பாலியல் பலாத்காரமே” -உச்சநீதிமன்றம்

18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அவரின் விருப்பமின்றி கணவர் உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, தனியார் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர் மற்றும் தீபக் குப்தா அமர்வு அளித்த தீர்ப்பில், கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக அந்த சிறுமி புகார் அளித்தால் கணவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் எனவும், அந்த சிறுமியின் ரத்த சொந்தங்கள் புகார் அளித்தாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த அரசியல் சாசன பிரிவு 375ல் கணவருக்கு வழங்கியிருந்த விதிவிலக்கை நீக்கி தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். 

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக, 18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணமாகி அவரின் விருப்பத்துடன் கணவர் உடலுறவு வைத்துக் கொண்டாலும் அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இது போன்று 2கோடியே 30லட்சம் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...