இந்திய ராணுவ மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி வழங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

தனியார் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது, அதிகளவிலான பணப் பரிமாற்றம் மற்றும் சொத்துக்களை பாதுகாத்தல் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது.  இந்த வங்கியானது, கடந்த ஜுன் 30-ம் தேதி வரையில் அமெரிக்காவில் 153 மில்லியன் அளவிற்கு வாடிக்கையாளர்களின் சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது.  தற்போது இந்தியா உள்பட 17 நாடுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு ரூ.10 கோடி ரூபாயை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகையை இரண்டு கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், முதற்கட்டமாக ரூ.5 கோடிக்கான காசோலையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் வழங்கினார். 



அப்போது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் பேசுகையில், நமது இந்திய ராணுவத்தினர் எல்லையில் தைரியமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியின் போது, ஒரு சில வீரர்கள் வீரமரணமும் அடைகின்றனர். அவர்களது இறப்பை எத்தனை நிதி கொடுத்தாலும் ஈடுகொடுக்க முடியாது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கியுள்ள நிதியின் மூலம், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மகள்களின் ஆதரவுக்காகவும், முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகளை மேற்படிப்பு படிக்க உதவி செய்யப்படும். மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணங்களும் நடத்த நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...