பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கைது

பசும் பால் லிட்டருக்கு ரூ.35 வழங்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தொடர்ந்து, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

விவசாயிகளின் விலை பொருளுக்கு உரிய விலை வழங்குதல், பசும் பால் விலையை 35 ரூபாய்க்கும், எருமை பால் விலை 45 ரூபாய்க்கும் வாங்குதல், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4000ம் வழங்குதல் மற்றும் மோடி தேர்தல் காலகட்டத்தில் அறிவித்தபடி அனைத்து விவசாய பொருளுக்கும் கூடுதல் விலை வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறோம்.



எங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாநில குழு வழிகாட்டுதலின் படி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார். 

தொடர்ந்து, முற்றுகை போராட்டம் நடத்திய 42 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...