கோவை மாநகர் பகுதியில் கடந்த ஆண்டில் 3,212 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன - பூங்கா திறப்புவிழாவில் மாநகராட்சி ஆணையர் பேச்சு


கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த பூங்கா, சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் முயற்சியால் புனரமைக்கப்பட்டடது. அனைத்து சீரமைப்புப் பணிகளும் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும குழந்தைகளின் பயன்பாட்டிற்காக பூங்கா இன்று (25.09.2017) திறக்கப்பட்டது.



இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள்,  தன்னார்வ தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சியின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு மட்டும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,212 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் மாநகராட்சியே செய்வது சிரமம். பொதுமக்கள் பங்களிப்பின்றி நல்ல செயல்கள் நடைபெறாது.



தற்போது திறக்கப்பட்டுள்ள பூங்கா கோவை மாநகராட்சியின் கண்காணிப்பில் இருக்கும். இருந்தபோதும் இந்த பூங்காவை அழகாக வைத்திருப்பது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. இது போன்ற பூங்காக்கள் பொதுமக்கள் நடை பயணம் மேற்கொள்ளவும், பொழுதுபோக்கிற்காகவும் பயன்படும் இடமாக இருப்பதோடு, உள்ளத்தையும், உடலையும் சீர்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் இணை இயக்குனர் செல்வராஜ் மற்றும் ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...