இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 4-ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், தமிழகத்தை சேர்ந்த நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.
கட்டுரைப் போட்டியின் தலைப்புகள்:
- 5-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு "அண்டை வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி.”
- 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு "பூமியில் வாழுஞ்சூழலற்றுப் போனால்...அடுத்து என்ன?"
- 11 மற்றும் 12 ஆம் மாணவ, மாணவியருக்கு "இன்னொரு கிரகத்துக்கு இன்ப சுற்றுலா போவாமா.?"
கட்டுரைகள், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அப்படியே சமர்ப்பிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டது. கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ, மாணவியர்களின் கையெழுத்தில் ஏ4(A4) அளவு தாளில் 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தலும் அவசியம்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் பெயர், வயது, வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்ய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒப்புதல் இணைக்க வேண்டும்.
கட்டுரைகள், அக்டோபர் 5 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, உறையின் மேல் கட்டுரைப் போட்டி எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக இயக்குநர், ஐ.பி.ஆர்.எ/ இஸ்ரோ,
மகேந்திரகிரி (அஞ்சல்)
திருநெல்வேலி -627133
தமிழகம்
தொலைபேசி எண்: 04637-281210, 283510
தமிழ், ஆங்கிலம் கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் மகேந்திரகிரியில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.