உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 4-ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், தமிழகத்தை சேர்ந்த நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரைப் போட்டியின் தலைப்புகள்:

  • 5-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு "அண்டை வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி.”
  • 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு "பூமியில் வாழுஞ்சூழலற்றுப் போனால்...அடுத்து என்ன?"
  • 11 மற்றும் 12 ஆம் மாணவ, மாணவியருக்கு "இன்னொரு கிரகத்துக்கு இன்ப சுற்றுலா போவாமா.?"


கட்டுரைகள், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அப்படியே சமர்ப்பிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டது. கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ, மாணவியர்களின் கையெழுத்தில் ஏ4(A4) அளவு தாளில் 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தலும் அவசியம். 

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் பெயர், வயது, வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்ய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒப்புதல் இணைக்க வேண்டும்.

கட்டுரைகள், அக்டோபர் 5 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, உறையின் மேல் கட்டுரைப் போட்டி எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக இயக்குநர், ஐ.பி.ஆர்.எ/ இஸ்ரோ,

மகேந்திரகிரி (அஞ்சல்)

திருநெல்வேலி -627133 

தமிழகம் 

தொலைபேசி எண்: 04637-281210, 283510

தமிழ், ஆங்கிலம் கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் மகேந்திரகிரியில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...