கரூரில் முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர் சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனதிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வருவாய்க்கு அதிகாகமாக சொத்து சேர்த்ததாக கரூரில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக நடத்திய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது, கருப்பு பணம் பதுக்கியதும், அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததும் தெரிய வந்தது.
இந்த சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ரூ.1.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.50 கோடி மதிப்பு பினாமி சொத்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 3 லாரிகளை திண்டுக்கல்லில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 லாரிகளும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ரூ.1.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.50 கோடி மதிப்பு பினாமி சொத்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 3 லாரிகளை திண்டுக்கல்லில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 லாரிகளும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.