ரத்தநாளத்தில் தையல் போடுதல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை குறித்து கே.எம்.சி.ஹெச்சில் பயிலரங்கம்

கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என கே.எம்.சி.ஹெச். (KMCH) கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன்படி, 4-வது பயிற்சி வகுப்பு மற்றும் பயிலரங்கு இன்று (23.09.2017) முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது.



பயிலரங்கம் குறித்து கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் தலைவரும், பயிற்சியின் இயக்குனருமான விவேகானந்தன் கூறுகையில், இரத்த நாளங்களை சேர்த்தல் மற்றும் கல்லீரலை அறுவை சிகிச்சையில் உள்ள நுணுக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு அறுவை சிகிச்சை நிபுணருக்கும் ஒரு பலவீனமாகவே இருந்து வருகிறது. ஆகவே, அவர்களுக்கு தங்களால் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில் நுணுக்கங்களை ஆர்வமுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிலரங்கமானது, ஜீரண மண்டல உறுப்புகள் அறுவை சிகிச்சை நிபுணர்களையும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தமது துறையாக மேற்கொள்ள நினைப்பவர்களையும் மனதில் கொண்டு நடத்தப்படுகிறது. விலங்கு திசுக்களின் நுணுக்கங்கள் மூலம் இந்த பயிற்சியில் பங்கு கொள்வோருக்கு கற்பிக்கப்படும். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நிபுணர்கள் பங்கு கொள்வோருக்கு வழி காட்டுவார்கள்.

முதுகலை பட்டதாரிகளுக்கும் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சையில் ஆர்வம் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் இந்த பயிலரங்கம் மிகவும் ஏற்றது. பயிற்சியை முடித்தவர்களுக்கு எத்திகான் (Ethicon) நிறுவனத்தின் சான்று வழங்கப்படுகிறது. 

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் துணை தலைவர் பழனிசுவாமி பேசுகையில், கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் குழுவில் உள்ள விவேகானந்தன், ராஜீவ் சின்ஹா மற்றும் சோரப் கபூர் ஆகியோரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இப்படி ஒருமேடை அமைத்து கொடுத்ததற்கு பாராட்டுகிறேன். இது போன்ற பயிலரங்குகளையும், மருத்துவ கூட்டங்களையும் நடத்துவதன் மூலம் வளர்ந்துவரும் நிபுணர்களுக்கு பல நுட்பமான சிகிச்சை முறைகளை கற்றுத்தர கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையம் முனைப்பாக செயல்படுவது தனக்கு பெருமிதமாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...