கோவையில் தொழிற்நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவையில் தொழிற்நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அதிகாரிகள் மற்றும் முன்னணி இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில், தொழில்நகரமான கோவையில் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய நகர்புற தொழில்சாலைத்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. 



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், அவினாசி அத்திக்கடவு குடிநீர் திட்டம் மற்றும் தொழிற்சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்பட கோவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும், தற்போது, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்பாக அரசு, பங்குதாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும். கோவையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். லாரி பட்டறை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...