தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தொழில்துறை சார்பாக நடைபெறும்  தொழில் வசதிச் சட்டம் மற்றும் விதிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னையில் 267 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து வருவதாகவும், அங்கு பல நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் துறையினருக்கான ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னணி மாநிலமாக திகழவதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை பன்னாட்டு விமான நிலைய  விரிவாக்க பணிகள் மற்றும் கோவையில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...