இரண்டாம் கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்கு கரை பகுதிகளில் சுமார் 75 ஆண்டுகளாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 537 வீடுகள் காவல்துறையினர் உதவியுடன் கடந்த செப்டம்பர் 12ம் தேதியன்று அகற்றப்பட்டன. இதில் அணைமேடு I – 71 வீடுகள், அணைமேடு II – 276 வீடுகள், துர்கா காலனியில் 7 வீடுகள், அண்ணா காலனியில் 56 வீடுகள், முத்து காலனியில் 64 வீடுகள், சேரன் நகரில் 53 வீடுகள் அகற்றப்பட்டன. 



அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அப்பகுதி மக்களை வெள்ளலூர் பகுதியில் குடியேற்றம் செய்து இன்று (செப்டம்பர் 21) காலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை துவங்கினர்.

இரண்டாம் கட்டமாக துவங்கப்பட்டுள்ள இப்பணி தொடர்ந்து நாளையும் நடைபெறும் என்றும் இதில், வெள்ளலூர் ராஜவாய்க்காலில் மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதில், ஆக்கிரமிப்பு நிலங்களான நஞ்சுண்டாபுரம் இட்டேரி - 280 வீடுகள், வெள்ளலூர் ராஜவாய்க்கால் - 39 வீடுகள், ஆத்துமேடு நஞ்சுண்டாபுரம் - 66 வீடுகள், அண்ணாநகர் பீளமேடு - 219 வீடுகள், குளத்து ஏரி அண்ணன் அண்ணாநகர் - 32 வீடுகள், அண்ணாநகர் ஒண்டிபுதூர் - 66 வீடுகள், கோத்தாரி லே-அவுட் - 30 வீடுகள், ஆட்டோ டிரைவர் காலனி - 121 வீடுகள் என மொத்தம் 853 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவுள்ளனர்.

இதனிடையே, கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து அங்குள்ள மக்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.



முன்னதாக, கோவையில் நீர்நிலைகள் அழிந்து வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...