மழைக்கால தொற்றுநோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் மூலம் மேற்கொள்ளப்படும் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் தொற்று நோய் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் வேண்டும்.

அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்பட்டு வரும் பாலங்கள், சாலைமேம்பாட்டுப் பணிகளின் நிலை, உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள், கல்வித்துறையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவது, பள்ளிகளில் நடைபெற்றுவரும் கட்டுமான வசதிகள், குறித்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழித்தல் முற்றிலும் ஒழித்திட பொதுமக்களிடையே வழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.



தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட ஆட்சியர் வாயிலாக உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேணடும்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்தில் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலருமான ஹர்மந்தர்சிங் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...