கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக சுஜித் குமார் பதவியேற்பு


கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக ஐ.பி.எஸ் அதிகாரி சுஜித் குமார் பதவியேற்றுள்ளார்.

இன்று காலை மாநகர ஆணையர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-



பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான் கடந்த 2013-ம் ஆண்டு அரசு தேர்வு மூலமாக ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தேன். மதுரையில் பயிற்சி முடிந்த பின்னர் சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தேன். தற்போது பதவி உயர்வு பெற்று இந்த பொறுப்பினை ஏற்றுள்ளேன்.

கோவை மக்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்கள் என்பதையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடிப்பவர்கள் என்று அறிந்தேன்.

அதே நேரத்தில் கோவை மாநகரில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 300 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் தற்போது வரை 200 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன். மேலும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்ச்சியை கொண்டு சேர்ப்பேன். அற்பணிப்புணர்வுடன் செயல்பட்டு போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகளை தடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...