கோவையில் அக்.,5-ம் தேதி அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியில் திறனாய்வுப் போட்டி

கடந்த 2016-2017 பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, இளைஞர்கள் தொழில்திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இப்போட்டிகளை நடத்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அரசாணையை வெளியிட்டது.

இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் இத்திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் படைப்பு மாநில அளவில் கலந்து கொள்வதற்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும். அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் வரும் அக்டோபர் 5-ம் தேதி காலை 11.00 மணியளவில் திறனாய்வு போட்டிகள் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியில் (GCT) நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று துறைகளில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் கீழ்காணும் வகைகளில் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பித்து பங்கேற்கலாம்.

பொறியியல் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்ப கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்கள்/ கலை மற்றும் அறிவியில் கல்லூரிகள்/ தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழிற் பழகுநர்களாக பயிற்சி பெறுவோர்.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்

குறுகிய கால பயிற்சிகள் மூலம் திறன் பெற்றோர் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் பணி அனுபவம் பெற்ற திறனுடையோர்

இப்போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெறுவோருக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், இவர்கள் மாநில அளவில் வர்த்தக மையம் நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர் ஆவர். இப்போட்டிகளைப் பார்வையிட தமிழகத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை தர உள்ளனர். 

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள்/ தொழிற்சாலை பணியாளர்கள்/ தொழிற்பழகுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளையும், திறனையும் வெளிப்படுத்துவதன் மூலம் நல்ல வேலை வாய்ப்பினை பெறலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.skilltraining.tn.gov.in. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 03.10.2017.

மேலும் விபரங்களுக்கு துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை-29. தொலைபேசி எண்: 0422-2642041

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...