காந்திபுரம் பேருந்து நிலையத்தில் “தூய்மையே சேவை” இயக்கப் பணிகள் துவக்கம்

கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் “தூய்மையே சேவை” இயக்க பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் அனைத்து மக்களையும் பங்கு பெறும் வகையிலும், அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் வகையிலும், சுகாதாரம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும் “தூய்மையே சேவை” இயக்க பணிகள் மாநகராட்சி சார்பாக செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் தொடக்கமாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.



இந்த இயக்கத்தின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலை உருவாக்குதல், கழிவறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுதல். அனைத்து பொது இடங்களிலும் சுத்தம் செய்தல். பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் வழிபாட்டு தளங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.



மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த “தூய்மையே சேவை” இயக்க பணிகளுக்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி, தங்கள் சார்ந்த அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...