அரசியல் களத்தில் கமல்..! விரைவில் உதயமாகிறதா புதிய கட்சி..?

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது டிவிட்டுகள் பலவும் கூட அரசியலுக்கு வருவதை உறுதிசெய்வதாகவே உள்ளன.

கடந்த சில காலமாக நடிகர் கமல்ஹாசன் அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆளும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், சில அரசியல் கட்சியினரை நேரடியாகவே தாக்கி டிவிட்டிலும் தனது கருத்தினை பகிர்ந்து வருகிறார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தான் அரசியல் களத்தில் ஏற்கனவே நுழைந்து விட்டேன் என பதிவு வெளியிட்டிருந்தார். சமூக வளைதலங்களிலும் இது பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.

தனது ஆரம்பகாலம் முதலே முற்போக்கு சிந்தனைகளுடன் செயல்பட்டு வரும் கமல், எந்த கட்சியில் இணைந்து செயல்படுவார் என தமிழக மக்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பினராய் விஜயனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், 'பினராய் விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்தேன்' என்று கூறினார். இது கமலின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாக உள்ளதாக பேசப்பட்டது. மேலும், அவர் கம்யூனிஸ்ட் அமைப்புடன் இணைந்து செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது, அவர் புதிய கட்சியினை விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலிற்கு முன்பு தனது கட்சியினை கமல் அறிமுகம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...