அரசியல் களத்தில் கமல்..! விரைவில் உதயமாகிறதா புதிய கட்சி..?

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது டிவிட்டுகள் பலவும் கூட அரசியலுக்கு வருவதை உறுதிசெய்வதாகவே உள்ளன.

கடந்த சில காலமாக நடிகர் கமல்ஹாசன் அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆளும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், சில அரசியல் கட்சியினரை நேரடியாகவே தாக்கி டிவிட்டிலும் தனது கருத்தினை பகிர்ந்து வருகிறார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தான் அரசியல் களத்தில் ஏற்கனவே நுழைந்து விட்டேன் என பதிவு வெளியிட்டிருந்தார். சமூக வளைதலங்களிலும் இது பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.

தனது ஆரம்பகாலம் முதலே முற்போக்கு சிந்தனைகளுடன் செயல்பட்டு வரும் கமல், எந்த கட்சியில் இணைந்து செயல்படுவார் என தமிழக மக்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பினராய் விஜயனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், 'பினராய் விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்தேன்' என்று கூறினார். இது கமலின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாக உள்ளதாக பேசப்பட்டது. மேலும், அவர் கம்யூனிஸ்ட் அமைப்புடன் இணைந்து செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது, அவர் புதிய கட்சியினை விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலிற்கு முன்பு தனது கட்சியினை கமல் அறிமுகம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...