நீட் தேர்விற்கு விலக்குகோரி கோவையில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பிற்கு 196 கட் ஆப் பதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக தலைமையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள்விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசிற்கு எதிராகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசிற்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்பை பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டன.



திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு திமுக பொறுப்பாளர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...