நிரம்பி வழியும் நிலையில் அவினாசி குளம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரை திறந்து விடும் அதிகாரிகளை தடுக்கும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அசனெல்லி பாளையத்தில் இருக்கும் குளமும் இந்த மழையால் முதல் முறையாக நிரம்பியது. 



இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி, குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்றது. எனவே, சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல,  அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குளத்தின் அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி விட்டு, குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நகராட்சியின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குளம் நீரின்றி வறண்டு கிடந்த போது பொதுமக்கள் அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாகவும், தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

இதனால், நேற்று (10,09,2017) இரவு பொதுமக்கள் ஏராளமானோர் போரட்டத்தில் ஈடுபட்டதால், குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

இதேபோல, அதே பகுதியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பிய போதும், அதிலிருந்து நீரை வெளியேற்றவும், குளத்தை தூர்வாருவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதைக் கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...