நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதிச் சான்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவு

குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவர் தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், நவோதயா பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாகவும், 11,12 ஆம் வகுப்பில் தமிழ் கூடுதல் பாடமாக இருப்பதாகவும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 வகுப்புகளில் கூடுதல் பாடமாக கற்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும்  என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு,

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

இது தமிழக அரசின் இரு மொழிக்கொள்கையை மீறும் விதத்தில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

மேலும், அதற்கான அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும் முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளியே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமையாததற்கு காரணம் என தெரிவித்தனர். 

இதனிடையே, ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தற்காலிக கட்டிடத்தில் பள்ளி இயங்கலாம் என விதியிருப்பதை புதுவை நவோதயா பள்ளி முதல்வர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு 20 கோடி ரூபாயை வழங்குவதாகவும் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் 8 வாரத்தில் தடையில்லா சான்று வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...