புதிதாக திறக்கப்படும் மதுபானக் கடையை தடுக்கக் கோரி பொதுமக்கள் மனு

கோவை மாநகராட்சிக்கட்பட்ட குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட காவல் ஆணையாளரிடம், பொதுமக்கள் சார்பில் கோவை மாநகர் தெற்கு தி.மு.க. மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " புதிதாக மதுபானக் கடை அமைக்கப்பட உள்ள குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் பள்ளிக் கூடம் உள்ளது. முக்கிய வழிபாட்டு தலமான ஈச்சனாரி விநாயகர் மற்றும் சாய்பாபா கோவில்களும் அமைந்துள்ளன. மேலும், போத்தனூரில் நடக்கும் மேம்பால பணிகளால், தற்போது இந்த சாலையில் போக்குரவத்து அதிகம் ஏற்பட்டுள்ளது. 



எனவே, செட்டிபாளையம் சாலையில் மதுபானக் கடை அமைந்துவிட்டால், குடிமகன்களின் அட்டகாசத்தால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும். மேலும், மதுபானக் கடை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நிலைமை ஏற்படும். 

ஆகவே, மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய மதுபானக் கடைகள் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...