தமிழக அரசால் நீட் பயிற்சி மையங்கள் கொண்டுவந்தால், கிராமப்புற மாணவர்களுக்கு ஆதாயம் கிட்டுமா..?

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்த்துள்ள தமிழக அரசு, மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடத்தி வருகிறது. 

மேலும், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி மையமும் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்றும், நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி நீட்-டுக்கு எதிராக தமிழக மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். 

மேலும், பெரும்பாலான குழந்தைகள் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக தமிழ் வழியில் கல்வி பயின்று வருவதாகவும், இதனால், நீட் தேர்வுக்கான பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

இதனிடையே, கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் முறை மேம்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்".  இவ்வாறு அவர் கூறியிருந்தார். 

அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனத்திடம், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி அளித்து வரும் கனகராஜ் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழகம் நல்ல நிலையில்தான் உள்ளது. தற்போதைய நீட் தேர்வை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் முறையான பயிற்சி மையங்கள் மற்றும் வசதிகளையும் செய்து கொடுத்தால்,  மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. 

நகர் மற்றும் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் செயல்படும் தனியார் பயிற்சி மையங்களும் நீட் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக அளிக்க முன்வர வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நடக்குமாயின், நீட் தேர்விலும் தமிழக மாணவர்களின் நிலை கொடி கட்டி பறக்கும்". இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...