இந்தியா முழுவதுமுள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி என்னும் பட்டத்தினை கோவை மாநகராட்சி சார்பில் தில்லியில் நடைபெற்ற 49 ஸ்காச் விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பெற்றார்.
கோவை மாநகராட்சியின் "ஸ்மார்ட் ட்ரீ" என்னும் திட்டத்தினை பாராட்டும் விதமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ட்ரீ குறித்தாக விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடுவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஸ்மார்ட் ட்ரீ திட்டமானது புதுவிதமான திட்டம் என்றும், இதுபோன்ற திட்டங்களை இன்னும் வேறு மாநிலங்களில் செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், கோவை மாநகராட்சியின் இந்த திட்டமானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் பின்பற்ற வேண்டும் என்று நடுவர்கள் குறிப்பிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சிறந்த மாநகராட்சிக்கான விருது கோவை மாநகராட்சி மற்றும் புனே மாநகராட்சிக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சியின் "ஸ்மார்ட் ட்ரீ" என்னும் திட்டத்தினை பாராட்டும் விதமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ட்ரீ குறித்தாக விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடுவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஸ்மார்ட் ட்ரீ திட்டமானது புதுவிதமான திட்டம் என்றும், இதுபோன்ற திட்டங்களை இன்னும் வேறு மாநிலங்களில் செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், கோவை மாநகராட்சியின் இந்த திட்டமானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் பின்பற்ற வேண்டும் என்று நடுவர்கள் குறிப்பிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சிறந்த மாநகராட்சிக்கான விருது கோவை மாநகராட்சி மற்றும் புனே மாநகராட்சிக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.