"கோ கிரீன் கோவைபுதூர்" கோவையில் முதன் முறையாக 42 கி.மீ. மராத்தான்


கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான மாரத்தான் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 42 கி.மீ. தொலைவு முழு மாரத்தான் போட்டியை கோவைபுதூர் ரன்னர்ஸ் கிளப், கோவைப்புதூர் ஆர்கிட் கேட்டேட் கம்யூனிட்டி ராகிண்டோ ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) கோவையில் நடத்தியது. 



பல்வேறு சமூக நலன்களுக்காக பல்வேறு விதமான மாரத்தான் போட்டிகள் கோவை நகரில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற இந்த 42 கி.மீ. தொலைவு மாரத்தான் கோவையில் நடைபெற்ற முதல் தொலைதூர மாரத்தான் போட்டியாகும். இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியோர், பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் பங்கேற்றனர். இவர்களுக்கு 5 கி.மீ. 10 கி.மீ. 21 கி.மீ. 42 கி.மீ. பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. பசுமையான கோவைபுதூரை உருவாக்குவதுதான் இந்தப் போட்டிகளின் பிரதான நோக்கம் என்கின்றனர் இதன் ஒருங்கிணைப்பாளர்களான சி. ராஜசேகர், விக்னேஷ், சரவணன், பிரபு, பீட்டர், ஸ்.கவிப்ரியா, ரீனா, மாயா, பிரிஸில்லா, மேரி ஆகியோர்.

கடந்த சில ஆண்டுகளாக கோவைபுதூர் தனது பசுமையை இழந்து வருகிறது. இதற்கு வேகமான நகரமயமாக்கலே முக்கியக் காரணமாக உள்ளது. பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் சுமார் 1300 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் எட்டு வயது குழந்தை முதல் 80 வயது முதியோர் வரை பங்கேற்று, ஓடினர். மேலும், கென்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றனர். போட்டிகளில் பங்கேற்றோருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 



போட்டிகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்களும், திமுகவை சேர்ந்த வீ. அறுமுகப்பாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். லையன்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் 5 கி.மீ. தொலைவு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தனர். 



கோவைபுதூரில் துவங்கிய இந்தப் போட்டிகள், சிபிஎம் கல்லூரி, பஞ்சாரா ஹில்ஸ், ஜெ.ஆர்.டி ஹில்ஸ் ஆகியவை வழியாக சென்றன. இந்தப் போட்டியில் பங்கேற்றோருக்கு டீ-சர்ட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியின் இலக்கை வெற்றி கரமாக எட்டிய நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்றோருக்கு 1.8 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.பி.கிருஷ்ணகுமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வெற்றி பெற்றவர்களை கௌரவித்தனர்.

42 கி.மீ மாரத்தான் போட்டியில் முதல் பரிசை 2.49.40 வினாடிகளில் கடந்து வினோத் குமாரும், இரண்டாம் பரிசை 2.54.53 வினாடிகளில் கடந்து பீட்டரும் மூன்றாம் பரிசை டி.சிவா வென்றார்கள். 21 கி.மீ மாரத்தான் போட்டியில் 1.13.04 வினாடிகளில் கடந்து பி.நாகேஷ் முதல் பரிசையும், 1.16.27 வினாடிகளில் கடந்து மைக்கேல் டிவோட் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் பரிசை கிருஷ்ணராஜ் வென்றார்கள். 21 கி.மீ பெண்கள் பிரிவில் 1.35.00 வினாடிகளில் கடந்து முதல் பரிசை எஸ்.பத்மாவதியும், 2.10.09 வினாடிகளில் கடந்து இரண்டாம் பரிசை எஸ்.தாரனியும், மூன்றாம் பரிசை என். கார்த்திகாவும் வென்றனர்.

10 கி.மீ ஆண்கள் போட்டியில் 38.15 நிமிடங்களில் கடந்து முதல் பரிசை நரேஷ் குமாரும், இரண்டாம் பரிசை சசி குமாரும், மூன்றாம் பரிசை பிரபுவும் வென்றனர். பெண்கள் பிரிவில் 1.46 நிமிடங்களில் கடந்து ஆர்.சினேகா முதல் பரிசையும், ஏ. தமிழ்அரசி பரிசையும் எம். தூனியா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

5 கி.மீ ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை எஸ்.கிருபாகரனும், இரண்டாமிடத்தை சஞ்சய்யும், மூன்றாமிடத்தை ஹேமந்த்தும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கார்த்திகா முதல் இடத்தையும், சுவாதிஸ்ரீ இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தை எஸ்.மாலனியும் பிடித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...