மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியது

கோவை மாவட்டம் கேரம் சங்கம் மற்றும் கோவை வடக்கு அரிமா சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் 2016-17 -க்கான  போட்டிகள் நேரு மைதானத்தில் இன்று (09,09,2017) துவங்கியது. 



துவக்க விழாவில், கோவை மாவட்டம் கேரம் சங்கம் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்டம் கேரம் சங்கம் சேர்மன் யுவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா சங்கம் 324-B5 மாவட்ட துணை ஆளுநர் வெங்கடசுப்ரமணியன் போட்டியை துவக்கி வைத்தார்.

3 நாட்கள் நடைபெறும் கேரம் போட்டியில் சீனியர் மற்றும் ஜுனியர்களுக்கான தனி மற்றும் இருவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றவுள்ளது. இதில், கோவையைச் சேர்ந்த 36 கேரம் கிளப்பின் துணை சங்கம் சார்பில் தனிப் போட்டியில் 164 குழுவும், இருதரப்பினர் போட்டியில் 64 குழுவாகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. 



அதேபோல, பள்ளி மாணவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயது மற்றும் 14 வயதோருக்கன கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், 18 மற்றும் 14 வயதோருக்கான பிரிவில் மொத்தம் ஆண்கள் 48 பேரும், பெண்கள் 24 பேரும் விளையாடவுள்ளனர். 

நாளை மறுநாள் (11.09.2017) அன்று நடைபெறும் காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு மொத்தம் பரிசுத் தொகையாக ரூ.25,000 மற்றும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.4000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும்.

இதில், கோவை வடக்கு அரிமா சங்கம் தலைவர் மனோகரன், செயலாளர் கோபிநாத், பொருளாளர் வெள்ளிங்கிரி, அரிமா ஜான் பீட்டர், கோவை வடக்கு அரிமா சங்கம் உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்டம் கேரம் சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...