நீலகிரியில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் ஆகியவை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் கோழிப்பண்ணை மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர், பங்களாபடிகை ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு கோழிபண்ணை வைப்பதற்கான இடத்தையும், கடினமாலா ஊராட்சிக்குட்பட்ட கோத்திமுக்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடத்தினையும் ஆய்வு செய்தார்.

மேலும், பழங்குடியினரிடையே இத்திட்டத்தைப்பற்றி எடுத்துக்கூறி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மெட்டுக்கல்  பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உணவு இருப்புகள் மற்றும் சமையலறையையும், மற்றும் பங்களாபடிகை ஊராட்சி ஒன்றியபகுதியில் உள்ள துவக்கப் பள்ளியையும், சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) பழனிசாமி, உதவி இயக்குநர் (கிராம ஊராட்சி) மேகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...