நீலகிரியில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் ஆகியவை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் கோழிப்பண்ணை மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர், பங்களாபடிகை ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு கோழிபண்ணை வைப்பதற்கான இடத்தையும், கடினமாலா ஊராட்சிக்குட்பட்ட கோத்திமுக்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடத்தினையும் ஆய்வு செய்தார்.

மேலும், பழங்குடியினரிடையே இத்திட்டத்தைப்பற்றி எடுத்துக்கூறி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மெட்டுக்கல்  பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உணவு இருப்புகள் மற்றும் சமையலறையையும், மற்றும் பங்களாபடிகை ஊராட்சி ஒன்றியபகுதியில் உள்ள துவக்கப் பள்ளியையும், சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) பழனிசாமி, உதவி இயக்குநர் (கிராம ஊராட்சி) மேகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...