சோமனூர் கட்டிட விபத்திற்கான காரணம்..! : ஊழலால் வீழ்ந்ததா பேருந்து நிலையம்?

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் பகுதியில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். தரமற்ற கட்டிடம் கட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என்றும், மக்களின் நலனி அக்கறை கொண்டு தரமான கட்டிடம் கட்டியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. 

தரமான கட்டிட வழிமுறை 

இந்த நிலையில், இடிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது குறித்து கட்டிட தரத்தை ஆய்வு செய்யும் நிபுணர் ஒருவர் கூறியதாவது :- பொதுவாக கட்டிடம் ஒன்றை கட்டும் முன்னர், சிமெண்டு, மணல், மற்றும் ஜல்லியின் தரத்தை சரி பார்க்க வேண்டும். மணல் மற்றும் ஜல்லியின் தரத்தை உறுதி செய்ய 2 நாட்கள் அவகாசம் தேவைப்படும்.

சிமெண்டின் தரத்தை சரி பார்க்க குறைந்தது 7 முதல் 28 நாட்கள் ஆகும். இவ்வாறு முழுமையான சோதனையின் பின்னர், கட்டுமான பொருட்களின் தரம் குறித்து அறிக்கை சம்பந்தபட்ட கட்டிட உரிமையாளர்கள் அல்லது பொறியாளர்களுக்கு  அனுப்பப்படும். இவ்வாறு கட்டப்படும் கட்டிடமே தரமானவையாக இருக்கும்.

கட்டுமான பணியின் போது, தரமான கட்டிடம் ஒன்றை கட்டி முடிப்பது முதல், கட்டிடத்தின் மீது கான்கிரீட் அமைப்பது வரை கட்டுமான பொருட்களின் கலவை விகிதம் என்பது மிக முக்கியம்.

(3:1) கலவை முறை 

தற்போது, சந்தையில் மூன்று விதமான தரங்களில் சிமெண்டுகள் கிடைக்கின்றது. அப்படி, எந்த தரத்தில் வாங்கினாலும், அதை 3 சட்டி மணலுக்கு 1 சட்டி சிமெண்ட் (3:1) என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும், அதனோடு 5 முதல் 7 சட்டி ஜல்லி கற்களை போடவேண்டும். இது, ஒரு தரமான கான்கிரீட் அமைக்க தேவையான கலவை முறை.

தற்போது வெளியான வீடியோவில், கான்கிரீட் பொரிந்து விழுகிறது. கட்டப்பட்டு 40 வருடங்களுக்கு மேலான கான்கிரீட் சுவர் தான் இப்படி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் கான்கிரீட் இப்படி பொரிந்து விழுமானால், அங்கு ஊழல் நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஊழலால் ஆன கட்டிடம்

ஏறத்தாழ 8 சட்டி மணலுக்கு ஒரு சட்டி சிமெண்ட் (8:1) என்ற விகிதத்தில் இந்த கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதே போல, கான்கிரீட்டுடன் மேற்கூரையில் ‘தளம்’ தரமானதாக அமைக்காமல் இருந்திருக்க வேண்டும். இந்த காரணங்கள்  தான் கட்டிடம் இடிந்து விழுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும்.

அதிக அளவு மணலை உபயோகித்து, குறைவான சிமெண்ட்டை உபயோகிக்கும் போது பணம் மிச்சமாகிறது. ஆனால், கட்டிடத்தின் தரம் கேள்விக்குறியாகி விடுகிறது. கான்கிரீட் கூரையின் மேல்பக்கத் தளம் தரமாக அமைக்க வேண்டும். சிமெண்ட்டை மிச்சப்படுத்த நினைக்கும் போது, மழை நீர் உள்ளே தேங்கி கான்க்ரீட் கம்பிகள் வலுவிழந்து போகும்.

தற்போது சோமனூரில் நடைபெற்ற விபத்துக்கு இவ்விரு காரணங்களே முக்கிய காரணியாக இருக்க கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...