கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ரயில் மறியல்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கோவை வழக்கறிஞர்கள் இன்று ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.



ரயில் நிலையத்திற்குள் புகுந்த வழக்கறிஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் இருந்து வந்த அலப்பி-பொக்ரோ ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் மீது ஏறிய வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை எனில் மீண்டும் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...