சோமனூர் பேருந்து நியைல விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்

கோவை மாவட்டம் சோமனூர் பேரூராட்சி பேருந்து நிலைய மேற்கூறைப் பகுதி கான்கிரிட் சுவர் எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினர்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம், சோமனூர் பேரூராட்சி பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட்ட சுவர் எதிர்பாராத வகையில் வியாழனன்று விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து நபர்களின் குடும்பத்தினர்களையும், படுகாயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் கூறியதாவது:-

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சோமனூர் பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட் சுவர் இடிந்து அதன் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் இரண்டு ஆண்கள் 3 பெண்கள் உட்பட ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.



மேலும், முதலமைச்சர் இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியுதவித் தொகைகளும் உடனடியாக வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 

தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பா.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை ஏ.சண்முகம், அம்மன் கே.அர்ச்சுணன், ஆர்.கணகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் அசோகன், உள்ளிருப்பு மருத்துவர் சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...