ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தம்

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கக் கோரி கோப்மா எனப்படும் பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் சிவானந்த காலனி அருகே உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



போராட்டம் குறித்து பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மத்திய அரசின் அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், விவசாயத்திற்கு மூலப்பொருளான பம்ப்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது, அவர்களை மேலும் தற்கொலைக்கு தூண்டும் செயலாக அமைந்துள்ளது. எனவே, வரி விதிப்பின் உச்சவரம்பை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினரின் இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தால், கோவையில் 3,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...