மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்கம்


மாநில அளவிலான குடியரசுத் தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டியை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி. வி.ஜெயராமன் துவக்கிவைத்தார். 

கோவை மாவட்டம் அரசம்பாளையம், எஸ்.வி.எஸ்.பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இன்று மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கலந்துகொண்டு சதுரங்கப்போட்டியை துவக்கிவைத்தார்.



இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 7 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, குறுமையம், மாவட்ட மற்றும் மண்டல அளவு என ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்றவர் 360 பேர் மாநில அளவில் நடைபெறுகிற போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு கீழ் என உள்ள 4 பிரிவுகளில் சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் மற்றும் விளையாட்டு விடுதி என 15 மண்டலங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் வனஜா, நசாரூதின், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (பொ) கீதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...