நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா

மதுரையை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரது மனைவி சபரிமாலா (34). இவர், திண்டிவனம் அடுத்த வைரபுரம் ஊராட்சி. ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனது ஏழு வயது மகன் ஜெயசோழனையும், அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.,6) பள்ளிக்கு வந்த ஆசிரியை சபரிமாலா, பணியை புறக்கணித்து விட்டு, தனது மகன் ஜெயசோழனுடன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்தக் கோரியும், பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன் ஆசிரியை நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 



அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வெள்ளிமேடுபேட்டை போலீசார், போராட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதை ஏற்று சபரிமாலா தனது போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில், இன்று (செப்.,7) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனை சந்தித்த சபரிமாலா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தையும் வழங்கினார். 

பணியை ராஜினாமா செய்தது குறித்து சபரிமலா கூறுகையில், "அரசு பணியில் இருப்பதால் சமூக பணிகளில் ஈடுபட முடியவில்லை. இதனால், பதவியை ராஜினாமா செய்தேன். கிராமந்தோறும் சென்று படிக்காத இளைஞர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...