மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வான நீட் தேர்வினால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று (நேற்று) தமிழகம் முழுவதும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாபெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பினை கேள்விக்குறியாக்கும் வகையிலான நீட் தேர்வு முறையினை ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொருப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (புதன் கிழமை) தொடர்ந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் அவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.

இறுதியில், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு நிமிடங்கள் அஞ்சலிக்குப் பிறகு மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று (நேற்று) தமிழகம் முழுவதும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாபெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பினை கேள்விக்குறியாக்கும் வகையிலான நீட் தேர்வு முறையினை ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொருப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (புதன் கிழமை) தொடர்ந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் அவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.

இறுதியில், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு நிமிடங்கள் அஞ்சலிக்குப் பிறகு மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
