நீட் பிரச்சனை: இரண்டாம் நாளாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வான நீட் தேர்வினால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று (நேற்று) தமிழகம் முழுவதும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாபெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பினை கேள்விக்குறியாக்கும் வகையிலான நீட் தேர்வு முறையினை ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொருப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (புதன் கிழமை) தொடர்ந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் அவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.



இறுதியில், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு நிமிடங்கள் அஞ்சலிக்குப் பிறகு மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.



Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...