நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு - தற்காலிகமாக மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி

வேலூரில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் சேர தனியாக நுழைவுத் தேர்வு நடத்தபடும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நீட்தேர்வு முறை அமல்படுத்தபட்டுள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு சி.எம்.சி. நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.எம்.சி. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ மணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக  சி.எம்.சி. நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்:- சுதந்திரத்துக்கு முன்பு ஆரம்பிக்கபட்ட சி.எம்.சி. மருத்துவ கல்லூரிக்கு தனி பாரம்பரியம் உள்ளது. அரசு உத்தரவுப்படி நீட் தேர்வை ஆதரிக்கிறோம். ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சி.எம்.சி. தனியாக நுழைவுத்தேர்வு நடத்தும். அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தபடும். 

அவர்களின் சமூக அக்கறை குழுவாக பணியாற்றும் பண்பு கிராமங்களில் சேவை செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தபடும். நீட்தேர்வு அடிப்படையிலான நேரடி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்  என்றனர்.

100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரசு உடனடியாக தடையில்லா நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...