நீலகிரி மாவட்டத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விழிப்புணர்வு முகாம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் மீக்கேரி கிராமத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று (செப்.,5) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர், முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மூலிகை பயிர்கள் என அனைத்து வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை நேரடி உணவாக உட்கொள்வதால், மருந்துகளில் உள்ள இரசாயன பொருட்களின் நச்சுத்தன்மை மனிதர்களுக்கு பல நோய்களை உருவாக்குகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறி மற்றும் பழங்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயன கொல்லிகள், அதிக அளவிலான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து மகசூலை பெருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் பாதுகாப்பு கவசங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை வட்டத்தில் வரும் 07-ம் தேதி குந்தசப்பை பகுதியிலும், 14-ம் தேதி பிக்கட்டி பகுதியிலும், 19-ம் தேதி சோலூர் பகுதியிலும், 21-ம் தேதி இத்தலார் பகுதியிலும், 26- ம் தேதி கடநாடு பகுதிகளிலும்,  குன்னூர் வட்டத்தில் 13-ம் தேதி பிக்கோல் பகுதியிலும், 15-ம் தேதி கெரடா பகுதியிலும், கோத்தகிரி வட்டத்தில் 06-ம் தேதி கூக்கல் பகுதியிலும், 07-ம் தேதி தேனாடு  பகுதியிலும், கூடலூர் வட்டத்தில் 07-ம் தேதி  மாங்குழி பகுதியிலும், 13-ம் தேதி தஞ்ஜோரா பகுதியிலும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. 

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (கோவை) இல.பெருமாள் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் டி.ஜெ.மீராபாய் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...