மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தனது இல்லத்தில், கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகலறிந்து வந்த போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவுரி லங்கேஷ் உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுரி லங்கேஷ் பிரபல கன்னட எழுத்தாளர் லங்கேஷ் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்க முன்பு பகுத்தறிவாளர் எம்.எம். கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 2008.ம் ஆண்டு  பா.ஜ.க. எம்.பி. பிரஹலாத் ஜோஷி மற்றும் பா.ஜ.க. தலைவர் உமேஷ் துஷி ஆகியோர் கவுரி லங்கேஷ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர். 

கவுரி லங்கேஷ்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கவுரியின் மரணத்திற்கு கேரளா மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பத்திரிகையாளர் லங்கேஷ் கொல்லப்பட்டதில் நிச்சயம் சதி உள்ளது என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...