டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் ஜி.எஸ்.டி. வரி குறித்த கருத்தரங்கு

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 

அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கோவையில்,  ஜி.எஸ்.டி.வரி விதிப்பில்   உள்ள நடைமுறைகள் குறித்து வணிகர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 8-ம் தேதி பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கு மையத்தில் நடைபெறுகிறது. இதில், ஜி.கார்த்திக்கேயன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, ஜி.எஸ்.டி.வரி குறித்த சந்தேகங்கள் மற்றும் அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளனர்.

டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனம் புதிய தொழில்முனைவோர்களின் முன்னேற்றம், வியாபாரத்தை பெருக்குவது உள்ளிட்டவைகள் குறித்தத பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம், 17 நாடுகளை சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில், 150 உறுப்பினர்கள் டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...