நீட் தேர்வு விவகாரம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜெயலலிதா கடிதம்

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. 

ஆனால், ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இது, தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 





அதில், மத்திய அரசிடம் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பதாவது:-  மருத்துவப் படிப்பிற்கான மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல். நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு போதிய பயிற்சி மையம் இல்லை. அவ்வாறு இருந்தால், அதில் பயன்பெறக் கூடிய வசதியில்லாதவர்களாக உள்ளனர். 

சமூக - பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காகவே, தமிழக அரசின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், தொலைதூரக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், மாற்றம் செய்யக் கூடாது. எதிர்காலத்திலும், நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. 

இவ்வாறு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,  பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...