மாணவி அனிதாவிற்கு நீதிகோரி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதுமுள்ள மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.



கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் நியாயமான இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவம் அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...