நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் - 6 போக்குவரத்து விதிகளை மீறினால் உரிமம் ரத்து

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் நாளை (புதன்கிழமை) முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இது அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் உடன் வைத்திருப்பது சாத்தியம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

இதனால், புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இதனை நாளை (புதன்கிழமை) முதல் தீவிரமாக அமல்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

தமிழகத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற நடைமுறை வந்தது எப்படி என்பது பற்றி போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலத்திலும் விபத்து மரணங்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உச்சநீதிமன்ற  வழிகாட்டுதலின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அடிக்கடி கூடி ஆய்வு செய்வார்கள்.

அப்போது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், செல்போனில் பேசிய படியே வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்வது போன்ற 6 விதி மீறல்களே உயிரிழப்புகளுக்கு கூடுதல் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டியதுதானே என்கிற கேள்வியும் உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது.

இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது அசல் ஓட்டுநர் உரிமத்தை யாரும் கையில் வைத்திருப்பது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னரே அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என வழிகாட்டுதல் குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை (புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

இந்த விதி மீறலில் ஈடுபடுவோரை மட்டுமே அதிகமாக சோதனை செய்து அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்போம். அதற்காக மற்றவர்களுக்கு விலக்கு எதுவும் கிடையாது. அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். இந்த விதி மீறல்களில் ஈடுபடுவோரின்  ஓட்டுநர் உரிமம் குறைந்தது 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...