கோவையில் பெய்த கனமழையால் நீரில் மிதக்கும் வீடுகள் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பு

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தோடுகிறது.

இந்நிலையில், சுங்கம் அருகே உள்ள கல்லுக்குழி பகுதி, நேற்று பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வீட்டின் பாதி சுவர் அளவுக்கு நீர் தேங்கி கிடப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.



இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறும் போது, தனது தந்தை உடல்நலக் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது, மருத்துவ பரிசோதனை குறிப்புகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டன. இதனால், தனது தந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வேதனையுடன் அவர் கூறினார். 

ஒவ்வொறு ஆண்டும் பெய்யும் கனமழையால், வீடுகள் நீரில் மூழ்கி பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே செல்வதாகவும்,  குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறுஇடத்தில் வீடு கட்டித் தருவதாக அதிகாரிகள் அளிக்கும் வாக்குறுதிகளும் வாடிக்கையாகி விட்டதாக கல்லுக்குழி பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



எனவே, தற்போது தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழைக்கு இந்த பகுதியில் 3 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...