ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது: வட்டார போக்குவரத்து அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல்  ஓட்டுனர் உரிமம் வைத்துக்கொண்டு தான் வாகனம் ஓட்டவேண்டும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உதரவிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு எதிரிப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி துரைசாமி, தமிழக அரசின் அசல் ஓட்டுநர் உரிமம் திட்டத்தை ரத்து செய்தார்.

இதனிடையே, ஒருசிலர் அசல் ஓட்டுனர் உரிமத்தை தவறவிட்டு, நகலினை பயன்படுத்தி வருவர். அவ்வாறாக தவறவிட்ட அசல் ஓட்டுனர் உரிமத்தை எப்படி பெறுவது ? என்பது குறித்து கோவை (மத்திய) வட்டார போக்குவரத்து  அலுவலர் உதயகுமார் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறியதாவது:- 

ஒருவரின் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தபின்னர், அதற்கான சான்றிதழை சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் மீண்டும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். 

தற்போது, ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால்  காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டியது இல்லை. இணையதளம் வழியாக புகார் அளித்து அதற்கான சான்றிதழையும் பெற முடியும். அந்த சான்றிதழை அந்தந்த பகுதி வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைப்பதன் மூலம் மீண்டும் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

அசல் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால் காவல்துறையினரின் இணைய சேவை மூலமாக புகார் அளிக்கும் வசதியை இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...