குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.5 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட நெடுகல்கம்பை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 மீட்டர் தடுப்புச்சுவர் பணியினையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 200 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



மேலும் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தைமலை கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், தைமலை முதல் அம்பேத்கர் நகர் வரை ரூ.20 லட்சம் மதிப்பில் 1.1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தின் கீழ் ஆடர்லி முதல் செம்புகரை வரை ரூ.4.23 கோடி மதிப்பில் 4.1 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வரும் சாலை பணியினையும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலூர் ஒசாட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.23.990 லட்சம் மதிப்பில் சிங்காரா பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலை பணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பில் உபதலை பகுதியில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட காரக்கொரை பகுதியில் ரூ.14.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...