தமிழகத்தில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவும் ஒரு காரணம் -பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்


ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களே ஆளுநரை குறை சொல்வார்கள் எனவும் தமிழகத்தில் தற்போதைக்கு தேர்தல் வர வாய்ப்பில்லை எனவும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட முடியாது என ஆளுநர் கூறி உள்ளது சரி எனவும், தமிழக அரசியல் நிலவரத்திற்கு ஏற்ப ஆளுநர் முடிவு செய்வார். எதிர்கட்சியினர் விருப்படி ஆளுநர் நடந்து கொள்ள முடியாது எனவும் சட்ட விதிகளின் படியே ஆளுநர் நடந்து கொள்வதாக தெரிவித்தார். 

திமுகவை சேர்ந்தவர்கள் ஆளுநரை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியவர், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களே ஆளுநரை குறை சொல்வார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்திப்பது என்பது அரசு சார்பாகவும் நிதி உதவி கேட்டுபதும், தவிர கட்சி பிரச்சினைகள் தொடர்பாக கிடையாது எனவும் இரட்டை சின்னத்தை மீட்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு நிகழவில்லை எனவும் தெரிவித்தார்

கட்சி பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தமிழக அரசு நிர்வாகத்தை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும் என்றவர், இதை தனது கோரிக்கையாக முதல்வருக்கு வைப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கட்சியின் உட்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்ள தனியாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும் எனவும் அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தற்போதைய ஆளும் கட்சிக்கு மாற்றாக திமுக இருக்க முடியாது என்று கூறினார். 

தமிழகத்தில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவும் ஒரு காரணம் என கூறினார். ஒரு வேளை தேர்தல் வரும் பட்சத்தில் திமுக வெற்றிப்பெறும் என கருத்து கணிப்புகள் சொல்லுவது தொடர்பான கேள்விக்கு தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தற்போதைய சூழலில் தேர்தல் வர வாய்ப்பில்லை எனவும் தமிழிசை தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...