வாகனம் ஓட்டும் போது ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம் என்றும், செப்.1 முதல் கட்டாயமாக ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்.1 முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்.1 முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.