'நதிகளை மீட்போம்' தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் செப்.,1ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் துவக்கம்

"நதிகளை மீட்போம் இயக்கம்" செப்.,1ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரத்தில் அமைதியாக 4 மணி நேரம் நின்று விழிப்புணர்வு முயற்சி. அழிந்து வரும் நம் தேசத்து நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச் செய்ய 'நதிகளை மீட்போம்' என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகிவருகிறது.

பலநூற்றாண்டுகளாய் வற்றாத ஜீவநதிகளாக ஓடி நம் மண்ணையும், நம் வாழ்வையும் கலாச்சாரத்தையும் வளப்படுத்தி வந்த நம் நதிகள் கடந்த சில வருடங்களில் கவலைக்குரிய விதத்தில் வற்றி வருகின்றன. நம் நதிகளை மீட்கும் முக்கிய தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.

நதிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வை உருவாக்கு வதற்காக செப்.,1ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை நாடெங்கும் லட்சக்க்கணக்கான மக்கள், தங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் நீலநிற உடை அணிந்தும், 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்ற அட்டைகளை ஏந்தியும் நிற்க உள்ளனர்.



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர்கள் சாலை ஓரங்களில் 50 அடி இடைவெளி விட்டுஅமைதியாக நிற்கப் போகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கார்பொரேட் நிறுவன பணியாளர்கள், திரை உலக பிரமுகர்கள் உள்ளிட்ட அணைத்து தரப்பினரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.



இது ஒரு போராட்டமோ ஆர்பாட்டமோ அல்ல, நதிகளை மீட்கும் முயற்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். பொதுமக்களிடையே, வற்றிவரும்  நதிகளின் நீரோட்டத்தை அதிகரிக்க வேண்டிய விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காக நாடெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவிருக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியது.

  • செப் 1ம் தேதி நீலநிற உடையணிந்தோ, நதிகளை மீட்போம் என்ற அட்டை ஏந்தியோ உங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் காலை 8 மணிமுதல் 11 மணிவரை நிற்கவேண்டும். ('நதிகளைமீட்போம்பாரதம்காப்போம்' என்றபடத்தை rallyforrivers.org என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்).
  • கூட்டமாக நிற்காமல் ஒவ்வொருவரும் குறைந்தது 50 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 
  • உங்கள் ஊரில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.
  • கிழக்கு தமிழகம் 8300021000, வட தமிழகம் 8300016000 ,மேற்கு தமிழகம் 8300057000, தென் தமிழகம் 9600297449, 8637498133 சென்னை 8300011000.


இந்திய தொழில்துறை குழுமம் (CII), இந்திய துணைராணுவம்(CRPF), எல்லை பாதுகாப்பு படையினர்(BSF), இந்திய ரயில்வே, உட்பட பல அமைப்புகள் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றனர். கட்சி பேதமில்லாமல், மத பேதமில்லாமல் பல தலைவர்களும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

முன்னூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ஆகியோர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 80009-80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...