'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்'- ஈஷாவில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு பேரணி

'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்பது நமது நாட்டில் ஓடும் ஆறுகளை மீட்டெடுத்து புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். நதிகளை மீட்கும் விழிப்புணர்வை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதற்காக, ஈஷா நிறுவனர் சத்குரு கோவையிலிருந்து கன்னியாகுமரி வழியாக ஹரித்வார் வரை 16 மாநிலங்களுக்கு, 32 நகரங்களுக்கு தாமே வாகனம் ஓட்டிசெல்ல உள்ளார்.

செப்டம்பர் 3-ம் தேதியன்று தொடங்கும் இந்த பேரணி, அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் நிறைவடையும். அக்டோபர் 2-ம் தேதி அரசாங்கத்திடம் நதிகளை மீட்கும் கொள்கை பரிந்துரை முன்வைக்கப்படும். இந்த கொள்கை பரிந்துரை, நமது நதிகளின் இரு புறத்திலும் வனப்பகுதிக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளியல் திட்டத்தை உள்ளடக்கியது.

இந்த பயணத்தின் போது சத்குரு, 16 மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து நதிகளை மீட்பதற்கான அவரது பரிந்துரைகளை ஒப்படைக்கவுள்ளார். 

இந்த முயற்சிக்கு விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து துறைகளிலிருந்தும் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு நதிகளை மீட்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, ஈஷா யோகா மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் 27 ஆகஸ்ட் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4:30 மணிமுதல் 5:30 மணிவரை 112 அடி ஆதியோகி சிலையிலிருந்து ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயிலான சர்ப்ப வாசல் வரை மனித சங்கிலி அமைத்தனர்.



இதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் நம் நதிகளின் இன்றைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள், கைவினை பொருட்கள் மற்றும் அட்டைகளை ஏந்தி நின்றார்கள். மேலும் 80009 80009 என்ற எண் வடிவத்தில் நின்றனர்.



Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...