வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் ஒற்றை காட்டு யானை தாக்கி வேலுச்சாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒருவார காலமாக ஒற்றை காட்டு யானை மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.



இந்நிலையில் இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள மயான பகுதிக்கு ஊர்பொதுமக்கள் அனைவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென்று அருகே உள்ள காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென அனைவரையும் துரத்தியுள்ளது.

இதில் வேலுச்சாமி (62) என்பவரை தனது துதிக்கையால் இழுத்த யானை தொடர்ந்து அவரை மிதித்து கொன்றது. இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனிடையே, தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வராத வனத்துறையினரைக் கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நேரில் வரும்வரை உடலை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.



மேலும் உயிரை பலிகொண்ட காட்டு யானை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒற்றை காட்டு யானையை உடனடியாக கும்கி யானை வரவழைத்து பிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...