காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்ற வாலிபர் பலி : சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி உறவினர்கள் புகார்


திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் துறையினர் தாக்கியதில் தினேஷ் என்ற கட்டுமான தொழிலாளி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (20 ). இவர் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக தினேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரை திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வலிப்பு ஏற்பட்டதால் தினேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிகிச்சைக்காக தினேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் தினேஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து தினேஷ்-ன் உறவினர் முத்து என்பவர் கூறுகையில், 'காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் கழுத்து எலும்பு உடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ் உயிரிழந்துள்ளார். பின்னர் தான் அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தினேஷ்-ன் மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் காட்ட மறுக்கின்றனர்.

மேலும், தினேஷை தனியார் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துவந்த தந்தை நாகராஜை உறவினர்களிடம் போலீசார் காட்ட மறுக்கின்றனர். 



எனவே, தினேஷ் மரணத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...